அருள்மிகு வெட்டுடையா காளி கோயில், அரியாக்குறிச்சி

எழுதியவர்: தி.ஜெ.ரா

கோயிலின் சிறப்புகள்:

     இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான காளி கோயிலாகும். இங்கு காளி தனது வலது காலை மடித்து அமர்ந்து, எட்டு கைகளுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண்பழி, அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்பாள் சன்னதியில் காசு வெட்டிப்போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் அம்பிகை தட்டிக்கேட்டு, குற்றவாளிகளைத் தண்டிப்பாள் என்பது நம்பிக்கை.  இக்கோயிலில் அய்யனாரும் வெட்டுடையா அய்யனார் என்ற பெயரில் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரிய ஒளி விழும்படி கோயில் அமைந்துள்ளது சிறப்பாகும்.

 

பலன்கள்:

பிரச்னையால் பிரிந்துவிட்டு மீண்டும் சேர விரும்பும் தம்பதியர், உறவினர், சகோதரர்கள் இங்கு “கூடுதல் வழிபாடு’ என்னும் பிரார்த்தனை செய்தால் மீண்டும் சேர்ந்து விடுவர் என்பது நம்பிக்கை.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் செல்லும் வழியில் 12 KM தொலைவில் கொல்லங்குடி உள்ளது. இவ்வூரில் இருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். கொல்லங்குடியிலிருந்து ஆட்டோ வசதிகள் உள்ளன. 

தங்கும் வசதி:

அருகிலுள்ள சிவகங்கையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். சிவகங்கையில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பவுர்ணமி நாட்களில் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

கோயில் முகவரி: 

அருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில், 

கொல்லங்குடி வழி, விட்டனேரி போஸ்ட், 

அரியாக்குறிச்சி, சிவகங்கை மாவட்டம் – 623 556

தொலைபேசி: 

90479 28314, 93633 34311

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்பத்தூர்

அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்பத்தூர்

இறைவன்: திருத்தளிநாதர், புத்தூரீசர்     இறைவி: சிவகாமி அம்மை    தீர்த்தம்: திருத்தளி தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற பாண்டியநாட்டு ஆலயங்களில் 6 வது ஆலயம். பல நூற்றாண்டுகளுக்கு முன் வால்மீகி முனிவர் கொலை, கொள்ளை...

அருள்மிகு கொடுங்குன்றீசர் திருக்கோயில், பிரான்மலை

அருள்மிகு கொடுங்குன்றீசர் திருக்கோயில், பிரான்மலை

இறைவன்: கொடுங்குன்றீசர்    இறைவி: குயிலமுதநாயகி   தீர்த்தம்: அடையவளந்தான் திருக்குளம்   பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற பாண்டியநாட்டு ஆலயங்களில் 5 வது ஆலயம். மலைக்கு கீழே உள்ள கோயிலான கொடுங்குன்றநாதர் சந்நிதியே பாடல் பெற்ற பதி....

அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில், அந்தியூர்

அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில், அந்தியூர்

கோயிலின் சிறப்புகள்:       இத்தலத்தில் அம்மன் பத்ரகாளியம்மனாக வீற்றிருந்து அருள்புரிகிறாள். சுடர் விட்டு பரவும் ஜூவாலை கொண்ட தலை, மண்டை ஓடு கீரிடம், எட்டு கைகளில் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், மகிஷனின் தலைமேல் கால் வைத்திருக்கும் பாவனை, விஸ்மய ஹஸ்தம் (செயற்கரிய...