அருள்மிகு பாபாஜி கோயில், பரங்கிப்பேட்டை

எழுதியவர்: தி.ஜெ.ரா

கோயிலின் சிறப்புகள்:

     இமய மலையில் இன்றும் வாழ்வதாக கருதப்படும் பாபாஜியின் அவதார தலம் இதுவாகும். பாபாஜியின் சீடரான ராமையா என்பவரால் இக்கோயில் எழுப்பப்பட்டது. 

பாபாஜியின் சந்நிதியின் முன் கவுரிசங்கர்பீடம் என்னும் யாக குண்டம் உள்ளது. பாபாஜி அவதார நாளான கார்த்திகை மாத ரோகினி நட்சத்திரத்தன்று இதில் யாக பூஜை நடக்கும். பாபாஜி கதிர்காமம் சென்றபோது, அவருக்கு முருகன் காட்சி தந்தார். இதை உணர்த்தும்விதமாக, ஒரு ஆலமரத்தின் கீழ் பாபவிற்கு முருகன் காட்சி தரும் சிலை வடிக்கப்பட்டுள்ளது. பாபாஜி சன்னதி விமானத்தில் அவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. பாபாஜியை சிலை வடிவமாக தரிசிக்கக் கூடிய கோயில் இது ஒன்றேயாகும். 

பலன்கள்:

தியானம் மற்றும் யோக நிலையை அடைய விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

பரங்கிபேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 1 KM தொலைவில் இக்கோயில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து 23 KM தொலைவு. பரங்கிப்பேட்டையிலிருந்து ஆட்டோ வசதி உள்ளது.

தங்கும் வசதி:

அருகிலுள்ள சிதம்பரத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம். சிதம்பரத்தில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. 

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 9.30 மணி வரை

மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு பாபாஜி திருக்கோயில், ரேவு மெயின்ரோடு, பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம் – 608502.

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், ராஜேந்திரப்பட்டினம்

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், ராஜேந்திரப்பட்டினம்

    இறைவன்: சுவேதாரண்யேஸ்வரர், நீலகண்டேஸ்வரர், திருகுமாரசாமி இறைவி: வீராமுலையம்மன் தீர்த்தம்: நீலோத்பவம் பாடியோர்: சுந்தரர்,  அப்பர், சம்பந்தர்   கோயிலின் சிறப்புகள்:      தேவார பாடல் பெற்ற நடு  நாட்டு ஆலயங்களில் 4 வது ஆலயம்.  வேதாகமங்களின்  உட்பொருளை...

அருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர்  திருக்கோயில், திருக்கூடலையாற்றூர்

அருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர்

          இறைவன்: நெறிகாட்டுநாயகர், நர்தனவல்லபேஸ்வரர் இறைவி: புரிகுழலாம்பிகை, ஞான சக்தி தீர்த்தம்: மணிமுத்தாறு பாடியோர்: சுந்தரர்     கோயிலின் சிறப்புகள்:       தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 3 வது ஆலயம். பிரம்மாவும்...

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம்

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம்

இறைவன்: சுடர்க்கொழுந்துநாதர், பிரளயகாலேஸ்வரர் இறைவி: கடந்தைநாயகி தீர்த்தம்: பெண்ணை நதி பாடியோர்: சம்பந்தர், அப்பர்    கோயிலின் சிறப்புகள்:                    தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 2 வது ஆலயம். இந்திரன் தேவலோகத்துக்கு பூ வேண்டி இரண்டு...