இறைவன்: |
குடமாடும் கூத்தன் |
இறைவி: |
அமிர்தகடவல்லி |
தீர்த்தம்: |
கோடி மற்றும் அமிர்த தீர்த்தம் |
தலவிருட்சம்: |
பலா |
மங்களாசாசனம்: |
திருமங்கையாழ்வார் |
கோயிலின் சிறப்புகள்:
மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 29வது திருத்தலம். குடத்துடன் ஆடி கொண்டு வந்தவர் என்பதாலும். கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய இறைவன் என்பதாலும் குடமாடு கூத்தன் என்ற பெயர். உதங்க முனிவர் இறைவனைக் குறித்து தவம் புரிந்து, கோபால கண்ணனாக இத்தலத்தில் பெருமாளைத் தரிசித்ததாக ஒரு வரலாறும் உண்டு. மூலஸ்தானத்தில் இறைவன் தரையில் வெண்ணை பானையின் மேல் ஒரு காலை வைத்து கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
பிரபந்தம்:
திருமடந்தைமண்மடந்தை இருபாலும்திகழத் தீவினைகள்போயகலஅடியவர்கட்குஎன்றும் அருள்நடந்து இவ்வேழுலகத்தவர்ப்பணிய வானோர் அமர்ந்தேத்தஇருந்தஇடம் பெரும்புகழ்வேதியர் வாழ் தரும்இடங்கள்மலர்கள்மிகுகைதைகள்செங்கழுநீர் தாமரைகள்தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ அருவிடங்கள்பொழில்தழுவி எழில்திகழும்நாங்கூர் அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் இவ்வூர் உள்ளது. ஏராளமான பேருந்து வசதிகள் உண்டு.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 9.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 6.00
கோயில் முகவரி:
அருள்மிகு குடமாடும் கூத்தன் திருக்கோயில், அரிமேய விண்ணகரம், திருநாங்கூர், மயிலாடுதுறை மாவட்டம் 609106.
தொலைபேசி:
04364-275689, 9443985843