அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருமருகல்

இறைவன்: மாணிக்கவண்ணர் 
இறைவி: வண்டுவார்குழலி 
தீர்த்தம்: மாணிக்க தீர்த்தம் 
பாடியோர்: சம்பந்தர்

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 80 வது ஆலயம்.  மருகல் என்பது ஒருவகை வாழை. இது கல்வாழையெனவும் வழங்குகின்றது. கருங்கல் தளத்திலேயே வளர்வதால் இப்பெயர் வந்தது என்கின்றார்கள். அதன் பழத்தை இறைவனுக்கு நிவேதிக்கலாமேயன்றி மக்கள் உண்ணல் ஆகாது; உண்டால் வயிற்று நோயுண்டாகும் என்பது அவ்வூர்மக்கள் வாய்மொழி. ஆனால் எப்போதும் காய் இருக்குமாம். இந்த வாழை தலவிருட்சமாதலின் இத்தலத்திற்கு இப்பெயர் வந்தது.

         கோச்செங்கட் சோழநாயனார் எழுப்பிய எழுபது மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. யானையேறாப் பெருங்கோயில். பாண்டியநாட்டு வணிகனாகிய தாமன் என்பவன் தன் மக்கள் எழுவரில் ஒருத்தியைத் தன்மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். அவர்களுக்குப் பருவம் வந்தகாலத்து ஒவ்வொருத்தியாகப் பிறருக்கு மணம் செய்துகொடுத்தான். அதனை உணர்ந்த ஏழாமவள் தாய்தந்தையர் அறியாமல் தன் நன்மாமனோடு உடன்போக்கு நிகழ்த்தினாள், திருமருகலையடைந்து ஒரு திருமடத்தில் இராத்தங்கினாள், அன்றிரவு அந்தச் செட்டி குமரனை வினைவயத்தால் பாம்பு தீண்டியது. அவன் இறந்தான். அவள் இறைவனைநோக்கி முறையிட்டுப் புலம்பினாள். சுவாமி தரிசனத்திற்காகவந்த திருஞானசம்பந்த சுவாமிகள் திரு உள்ளத்தை இவள் அழுகை ஒலி அருள்சுரக்கச் செய்தது. சுவாமிகள் திருப்பதிகம் பாடி அவனை எழுப்பினார். தம் திருமுன்பே அவர்களுக்குத் திருமணம் முடிப்பித்தார் என்பது இத் தலத்தைப்பற்றிய சிறந்த நிகழ்ச்சி. 

தேவாரம்:   

சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

திருவாரூரிலிருந்து  20.கி.மீ.  தொலைவில்  இக்கோயில்  உள்ளது.  திருவாரூரிலிருந்து  பேருந்துகள்  உள்ளன. 

தங்கும் வசதி:

திருவாரூரில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 5.00 – 9.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருமருகல், நாகப்பட்டினம்  மாவட்டம் 609702.

தொலைபேசி:

ஐய்யாசாமி  குருக்கள் – 9791400720, 04366 – 270823

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...