இறைவன்: | அபிராமேஸ்வரர், அழகியநாதர் |
இறைவி: | முக்தாம்பிகை |
தீர்த்தம்: | பாம்பை ஆறு |
பாடியோர்: | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 21 வது ஆலயம். ஒரு காலத்தில் கொம்பு இல்லாமல் அவதி பட்ட பசுக்களுக்கு இறைவன் கொம்பு கொடுத்த தலம். இது பசுக்களின் தாய் ஊர் எனப்படும். மூலவரின் மேல் பசுவின் கால் குளம்பும் பால் சொரிந்த அடையாளமும் உள்ளது. இந்த இறைவனுக்கு அபிராமேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இறைவனுக்கும் இறைவிக்கும் தனி தனி கோயில். அம்மன் கோயில் பிரகார சுற்றில் ஒரு வட்ட பாறையும் சிவலிங்கமும் உள்ளது இந்த பாறையின் முன் ராமனும் சுக்ரீவனும் ராவணனை அழிக்க ஹனுமானை சாட்சியாக கொண்டு உடன் படிக்கை செய்த சன்னதி. இங்கு பொய் கூறுவோர் பாம்பு தீண்டபெறுவார்கள். இறைவியால் சபிக்கப்பட்ட பிருங்கி முனிவர் வன்னி மரமாகி சாபம் நீங்கப்பெற்ற இடம். திருமண தடை, குழந்தை பேறு இல்லாமை போன்ற குறைபாடு நீங்க இறைவியை வழிபடுகிறார்கள்.
தேவாரம்:
பாடுவான் பாடுவான் பார்ப்பதி தன்அடி பற்றி நான்
தேடுவன் தேடுவன் திண்னெனப் பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளைக்
கூடுவன் கூடுவன் குற்றமதர்றேன் குறிபொடே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
விழுப்புரம் செஞ்சி சாலையில் விழுப்புரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. விழுப்புரத்திலிருந்தும், செஞ்சியிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
தங்கும் வசதி:
விழுப்புரத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம். விழுப்புரத்திலிருந்து பேருந்துகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 – 12.00 மற்றும் மாலை 5.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு அபிராமேஸ்வரர் திருகோயில், திருஆமத்தூர் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம் 605402.
தொலைபேசி:
கே. அருணாச்சல சிவாச்சாரியார் 04146 – 223319, 223379, 9843066252