அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில், அந்தியூர்

எழுதியவர்: தி.ஜெ.ரா

கோயிலின் சிறப்புகள்:

      இத்தலத்தில் அம்மன் பத்ரகாளியம்மனாக வீற்றிருந்து அருள்புரிகிறாள். சுடர் விட்டு பரவும் ஜூவாலை கொண்ட தலை, மண்டை ஓடு கீரிடம், எட்டு கைகளில் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், மகிஷனின் தலைமேல் கால் வைத்திருக்கும் பாவனை, விஸ்மய ஹஸ்தம் (செயற்கரிய செயல்களை செய்யும் போது வியந்து பாராட்டும் சிறப்பம்சம்) நாகம், மணி, கிண்ணத்துடன் அம்மன் எட்டு கைகளுடன் அருள்புரிகிறாள். மகிஷனின் தலையில் கால் வைத்துள்ளதால், நவராத்திரி நாயகியான மகிஷாசுரமர்த்தினியாகவும் கருதப்படுகிறாள். இங்கு நடக்கும் குண்டம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமணம், நிலம் வாங்குதல், விற்றல், கிணறு வெட்டுதல் வியாபாரம் துவங்குதல், கல்வி போன்ற விஷயங்களுக்கு அம்மன் சிரசில் பூ வைத்து, தொழில் துவங்கலாமா என வாக்குக் கேட்கும் வழக்கம் உள்ளது. பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க, தங்கள் தாலியையே காணிக்கையாக தருவதாக அம்பாளிடம் வேண்டுகின்றனர். குறிப்பாக, உயிருக்கு போராடும் கணவருக்காக இத்தகைய பிரார்த்தனையைச் செய்வது மரபாக உள்ளது. அந்தி என்றால் இறுதி என பொருள்படும். ஆகையால் இந்த அந்தியூர் பத்ரகாளியை வணங்குவதால், எந்த பிரச்னையும் இறுதி முடிவுக்கு வருவதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் உள்ள வீர காலபைரவரும் புகழ்பெற்று விளங்குவது சிறப்பாகும். 

 

 பலன்கள்:

      திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், நிலம் வாங்குதல், விற்றல், கிணறு வெட்டுதல், வியாபாரம் துவங்குதல், போன்ற தொழில்கள் செய்யவும் இங்கு பிரார்த்தனை செய்து பலனடையலாம் என்பது நம்பிக்கை. 

 

 இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

      ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து 19KM தொலைவில் இக்கோயில் உள்ளது. பவானியிலிருந்தும், ஈரோட்டிலிருந்தும் பேருந்துகள் உள்ளன. 

 

தங்கும் வசதி:

      அருகிலுள்ள ஈரோட்டில் தங்கி அங்கிருந்து செல்லலாம். பவானியிலும் தங்கும் விடுதிகள் உள்ளன.

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

 காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 

 

கோயில் முகவரி: 

 அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில், அந்தியூர், ஈரோடு மாவட்டம்.

 

 தொலைபேசி: 

 04256 261774

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு நம்புநாயகி அம்மன் கோயில், இராமேஸ்வரம்

அருள்மிகு நம்புநாயகி அம்மன் கோயில், இராமேஸ்வரம்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் அம்மன் நம்புநாயகி என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். ஒரு சமயம் இத்தலத்தில் தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்கள் கடுமையான தவம் மேற்கொண்டிருந்தனர். அவர்களது தவத்தை கண்டு மெச்சிய அம்மன் அவர்களுக்கு...

அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், அம்பத்தூர்

அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், அம்பத்தூர்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் அம்மன் இசக்கியம்மன் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி என்று பெயர். அப்பெயரே இசக்கி என மருவி இசக்கியம்மன் என்று அழைக்கப்படுகிறது. உக்ர தெய்வமான...

அருள்மிகு பாலா திரிபுரசுந்தரி கோயில், நெமிலி

அருள்மிகு பாலா திரிபுரசுந்தரி கோயில், நெமிலி

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் உலகாளும் அம்மையான லலிதாம்பிகையின் மகளான பாலா திரிபுரசுந்தரி அருள்புரிகிறாள். முன்னொரு காலத்தில் பண்டாசுரன் என்னும் அசுரன் லலிதாம்பிகையோடு போரிட்டு தோற்றான். அவனுக்கு முப்பது புத்திரர்கள் இருந்தனர். அவர்களையும் அழித்தால் தான்...