அருள்மிகு பிரசன்ன வெங்கடேச நரசிம்ம பெருமாள் கோயில், சைதாப்பேட்டை

எழுதியவர்: தி.ஜெ.ரா

கோயிலின் சிறப்புகள்:

     ஒரு காலத்தில் இக்கோயிலில் கோதண்டராமர் சன்னதி மட்டுமே இருந்தது. ஒரு சமயம் ராமரை வழிபட்டு வந்த பக்தர் ஒருவரின் கனவில் பிரசன்னமாகிய வெங்கடேசப் பெருமாள், தனக்கு சன்னதி எழுப்பும்படி கூறினார். அதன்பின், இங்கு வெங்கடேசருக்கு கோயில் எழுப்பப்பட்டது. பக்தரின் மனதில் பிரசன்னமாகி அதனால் எழுப்பப்பட்ட கோயில் என்பதால் சுவாமி பிரசன்ன வெங்கடேசர் என்று பெயர் பெற்றார். இங்கு வேங்கடேசரை பிரதிஷ்டை செய்தபோது கூடவே  அழகிய சிங்கர் விக்ரகத்தையும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். எனவே இக்கோயில் பிரசன்ன வெங்கடேச நரசிம்ம பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் பிரசன்ன வெங்கடேசர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூலவரின் பாதத்திற்கு அருகில் நரசிம்மர் சிம்ம முகம் இல்லாமல் சுயரூபத்துடன் சாந்தமான முகத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர் அழகிய சிங்கர் என்று அழைக்கப்படுகிறார். வெங்கடேசருக்கு பூஜை செய்தபின்பு இவருக்கு பூஜை செய்யப்படுகிறது. இங்குள்ள ராமர் சன்னதியில் ஒரே நேரத்தில் ராமபிரானை திருமண கோலத்திலும் பட்டாபிஷேக கோலத்திலும் தரிசிப்பது சிறப்பாகும். 

 

பலன்கள்:

திருமண தோஷம் மற்றும் புத்திர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வேண்டி தோஷம் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

சென்னை சைதாபேட்டையில் இக்கோயில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் உள்ளது. சைதாபேட்டைக்கு சென்னையின் அனைத்து இடங்களிலிருந்தும் மாநகரப் பேருந்துகள் உள்ளன. 

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை

மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு பிரசன்ன வெங்கடேச நரசிம்ம பெருமாள் கோயில், மேற்கு சைதாப்பேட்டை, சென்னை- 600 015.

தொலைபேசி: 

93811 63501

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

அருள்மிகு சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

இறைவன்: சௌந்திரராஜ பெருமாள் இறைவி: சௌந்திரவல்லி தாயார் தீர்த்தம்: சார புஷ்கரணி தீர்த்தம் மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்   கோயிலின் சிறப்புகள்:      மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 17வது திருத்தலம். நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம்...

அருள்மிகு லோகநாத பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி

அருள்மிகு லோகநாத பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி

இறைவன்: லோகநாத பெருமாள் இறைவி: லோகநாயகி தாயார் தீர்த்தம்: சிரவண புஷ்கரணி தீர்த்தம் மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் கோயிலின் சிறப்புகள்:      மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 18வது திருத்தலம். காயாமகிழ், உறங்காப்புளி, தேறா வழக்கு, உறா கிணறு திருக்கண்ணங்குடி...

அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம்

அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம்

இறைவன்: நீலமேகப்பெருமாள் இறைவி: கண்ணபுர நாயகி தீர்த்தம்: நித்ய புஷ்கரணி தீர்த்தம் மங்களாசாசனம்: பெரியாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் கோயிலின் சிறப்புகள்:      மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 17வது திருத்தலம். நீலமேக பெருமாள்...