அருள்மிகு சிகாநாதர் கோயில், குடுமியான்மலை

எழுதியவர்: தி.ஜெ.ரா

கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் இறைவன் சிகாநாதர் என்ற திருநாமத்துடனும் அம்மன் அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்துடனும் வீற்றிருந்து அருள்புரிகின்றனர். இக்கோயில் சிற்பக் கலையின் சிறப்பை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. நுழைவு வாயில் முதல் கருவறை வரை ஏராளமான கலைநயம் மிக்க சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். இத்தலத்தில் துவாரபாலகர்கள் எதிரும் புதிருமாக நின்று வாயிலைக் காப்பது சிறப்பாகும். நாயன்மார்கள் அறுபத்துமூவரின் சிலைகளை பொதுவாக பிரகாரங்களிலேயே காணமுடியும். ஆனால், இக்கோயிலில் மலை உச்சியில் சிற்பமாக வடித்துள்ளனர். நாயன்மார்கள் சிலை முடியும் இடத்தில் விநாயகர் சிலை வைப்பது மரபு. ஆனால், இங்கு ரிஷபத்தில் அமர்ந்த சிவபார்வதி நடுவில் இருக்க, நாயன்மார்கள் இருபுறமும் இருப்பது சிறப்பான அம்சம். இத்தகைய அமைப்பை தமிழகத்தில் வேறெங்கும் காணமுடியாது. இத்தலத்தில்தான் சனீஸ்வரனால் சோதிக்கப் பட்ட நளன் இறைவனை வேண்டி அருள்பெற்றான் என்பது இத்தலத்தின் மேலுமொரு சிறப்பாகும். 

 

பலன்கள்:

இத்தலத்து இறைவனை வழிபட்டால் காதல் திருமணம் எந்த தடையுமில்லாமல் கைகூடும் என்பது நம்பிக்கை.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

புதுக்கோட்டையிலிருந்து மணப்பாறை செல்லும் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 20 KM தொலைவில் இக்கோயில் உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

அருகிலுள்ள புதுக்கோட்டையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். புதுக்கோட்டையில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. 

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்  –  622104

தொலைபேசி: 

04322 221084, 98423 90416

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...