இறைவன்: | திருமேனியழகர் |
இறைவி: | வடிவாம்பிகை |
தீர்த்தம்: | மகேந்திரப்பள்ளி தீர்த்தம் |
பாடியோர்: | திருஞானசம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 6 வது ஆலயம். சுவாமி மற்றும் அம்பாள் இங்கு அழகாக காட்சி தருவதலால் திருமேனியழகர் , வடிவாம்பிகை என்று பெயர். ஞானசம்பந்தர் ஸ்வாமியை அழகர் என்று பாடியிருக்கிறார். சூரியன், சந்திரன், பிரம்மா , இந்திரன் வழிபட்டதலம் . இந்திரன் தன் சாபம் நீங்க இங்கேயும் லிங்க ப்ரதிஷ்டை செய்து வணங்கிய தலம் அருணகிரிநாதர் இத்தலத்து இறைவனை பற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.
தேவாரம்:
கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை
கண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சீர்காழியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
தங்கும் வசதி:
அருகிலுள்ள சீர்காழி அல்லது மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். இவ்விரு ஊர்களிலும் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 9.00 – 12.00 மற்றும் மாலை 6.00 – 7.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி, சீர்காழி தாலுக்கா, மயிலாடுதுறை மாவட்டம் 609101.
தொலைபேசி:
ஏ .குருசாமி குருக்கள். : 04364-292309