அருள்மிகு திருஊரகபெருமாள் கோயில், குன்றத்தூர்

எழுதியவர்: தி.ஜெ.ரா

கோயிலின் சிறப்புகள்:

     இந்த கோயில் சென்னை குன்றத்தூரில் முருகன் கோயிலுக்கும், கந்தழீஸ்வரர் கோயிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது. இக்கோயில் குலோத்துங்க சோழனால்
கட்டப்பட்டது. ஒரு சமயம் குலோத்துங்க சோழன் காஞ்சியில் உள்ள திருஊரக பெருமாளை தரிசித்து தன் தோஷம் விலகப்பெற்றான். தோஷம் போக்கிய பெருமாளுக்கு நன்றிக் கடனாக ஒரு கோயில் கட்ட எண்ணினான். அப்போது அவனது கனவில் தோன்றிய பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதி வடிவில் காட்சி தந்தார். அதே வடிவில் ஒரு சிலை வடித்து பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினான். அதுவே இந்த கோயிலாகும். இங்கு புரட்டாசி நாலாவது சனிக்கிழமையில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது காண கண்கொள்ளா காட்சியாகும். பங்குனி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் சுவாமி தாயார் திருக்கல்யாணம் நடக்கின்றது.

பலன்கள்:

மன்னனுக்கு தோஷம் விளக்கிய பெருமாள் ஆதலால், இந்த பெருமாளை கிரக தோஷம் உள்ளவர்கள் அந்தந்த கிரகத்திற்கு உரிய நாட்களில் தரிசித்தால் தோஷ நிவர்த்தி பெறுவர் என்பது ஐதீகம்.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

சென்னை குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து 2 km தொலைவில் உள்ளது.

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

கோயில் முகவரி:

அருள்மிகு திருஊரக பெருமாள் கோயில்

குன்றத்தூர், சென்னை – 600069

தொலைபேசி:

 044 – 24780436, 9840158781

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

அருள்மிகு சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

இறைவன்: சௌந்திரராஜ பெருமாள் இறைவி: சௌந்திரவல்லி தாயார் தீர்த்தம்: சார புஷ்கரணி தீர்த்தம் மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்   கோயிலின் சிறப்புகள்:      மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 17வது திருத்தலம். நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம்...

அருள்மிகு லோகநாத பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி

அருள்மிகு லோகநாத பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி

இறைவன்: லோகநாத பெருமாள் இறைவி: லோகநாயகி தாயார் தீர்த்தம்: சிரவண புஷ்கரணி தீர்த்தம் மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் கோயிலின் சிறப்புகள்:      மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 18வது திருத்தலம். காயாமகிழ், உறங்காப்புளி, தேறா வழக்கு, உறா கிணறு திருக்கண்ணங்குடி...

அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம்

அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம்

இறைவன்: நீலமேகப்பெருமாள் இறைவி: கண்ணபுர நாயகி தீர்த்தம்: நித்ய புஷ்கரணி தீர்த்தம் மங்களாசாசனம்: பெரியாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் கோயிலின் சிறப்புகள்:      மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 17வது திருத்தலம். நீலமேக பெருமாள்...