அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், புதுப்பாக்கம்

எழுதியவர்: தி.ஜெ.ரா

கோயிலின் சிறப்புகள்:

     ராமாயணத்தில் ஆஞ்சநேயர் மட்டுமே இலங்கைக்கு மூன்று முறை சென்று வந்தவர். மூன்றாவது முறை சஞ்சீவி மலையை சுமந்துகொண்டு சென்றார். வடக்கிலிருந்து சஞ்சீவி மலையை சுமந்துகொண்டு வரும்போது அந்தி நேரமாகி விட்டதால் தனது நித்திய கடமையான சந்தியாவதனம் செய்ய இம்மலையில் இறங்கினார். ஆஞ்சநேயர் திவ்ய உருவத்தில், முகம் வடக்கு நோக்கிப் பார்த்தபடி இருக்க உடல் கிழக்கு நோக்கி இருக்க, வலது பாதம் தரையில் ஊன்றி, இடது பாதம் பறப்பதற்குத் தயாராக உயர்த்தி தரையில் படாமலும், ஒரு கை பக்தருக்கு அபயம் காட்ட மறுகை இடையிலிருக்க, தலைக்கு மேல் தூக்கிய வாலில் மணியும், நாபிக் கமலத்தில் தாமரைப் பூவுமாக பொலிவுடன் காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் சந்நிதியின் எதிரிலேயே ராமர் சீதை லக்ஷ்மனருடன் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். இக்கோயில் வியாச முனிவரால் கட்டபெற்றதாக ஐதீகம். இக்கோயிலை அடைய 108 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும் என்பது சிறப்பாகும். 

பலன்கள்:

இத்தலத்து அனுமனை வேண்டினால் அணைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் வண்டலூரிலிருந்து 12 KM தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. தாம்பரத்திலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 10.00 மணி வரை

மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் புதுப்பாக்கம், சென்னை-600048.

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கோவளம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கோவளம்

கோயிலின் சிறப்புகள்:       இத்தலத்தில் இறைவன் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள கோயில் இது. இப்பகுதியில் வசித்த கடல் வணிகர்கள் பயணத்தின்போது பாதுகாப்பாக இருக்கவும், தொழில் சிறக்கவும் சிவபெருமானுக்கு ஒரு...

அருள்மிகு மலைமண்டலப் பெருமாள் கோயில், சதுரங்கப்பட்டினம்

அருள்மிகு மலைமண்டலப் பெருமாள் கோயில், சதுரங்கப்பட்டினம்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலம் சற்று மேடானப் பகுதியில் அமைந்துள்ளதால் இத்தலத்து பெருமாள் மலைமண்டலப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள கருட பகவான் மிகவும் விசேஷமானவர். இந்த கருடன் தலையில் ஒன்று, இரு காதுகளில் ஒவ்வொன்று, மார்பினில் மாலையாக இரண்டு,...

அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், அம்பத்தூர்

அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், அம்பத்தூர்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் அம்மன் இசக்கியம்மன் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி என்று பெயர். அப்பெயரே இசக்கி என மருவி இசக்கியம்மன் என்று அழைக்கப்படுகிறது. உக்ர தெய்வமான...