அருள்மிகு வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை

எழுதியவர்: தி.ஜெ.ரா

கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் பெருமாள் மதுரை அழகர் கோயிலைப் போலவே ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இக்கோயில் மாவலி வாணாதிராயர் என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்த மன்னன் தினமும் மதுரை சென்று அழகரை தரிசிப்பது வழக்கம். ஒரு சமயம் உடல் நலம் சரியில்லாமல் போகவே மதுரை செல்ல முடியவில்லை. தன் நிலை கண்டு வருந்திய மன்னன் பெருமாளை வேண்டினான். திருமாலும் மன்னன் முன் தோன்றி மானாமதுரையிலேயே அழகர்கோயிலைப் போலவே ஒரு கோயில் கட்டி வழிபடுமாறு கூறினார். இக்கோயிலில் வழிபட்டால் மதுரை அழகர் கோயிலில் தரிசனம் செய்த பலன் கிட்டும் என்றும் கூறினார். மேலும் ஒரு எலுமிச்சையை வைகை ஆற்றில் விட்டு அது ஒதுங்கும் இடத்தில் கோயில் கட்டுமாறும் கூறினார். எலுமிச்சையின் ஒரு பகுதி கோயில் உள்ள இடத்திலும் மற்றொரு பகுதி 4 KM தொலைவிலும் கரை ஒதுங்கியது. அதனால் இக்கோயிலின் குளம் 4 KM தொலைவில் உள்ளது. இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வடை மாலை ஒரு மாதமானாலும் கெடாது என்பது சிறப்பாகும். 

 

பலன்கள்:

இத்தலத்திலுள்ள தாயாருக்கு வெள்ளிகிழமைகளில் தாமரைத்திரியால் விளக்கு போட்டு வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

மதுரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் 50 KM தொலைவில் இவ்வாலயம் உள்ளது. மதுரையிலிருந்தும், சிவகங்கையிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன.

தங்கும் வசதி:

மானாமதுரையில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. 

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்பத்தூர்

அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்பத்தூர்

இறைவன்: திருத்தளிநாதர், புத்தூரீசர்     இறைவி: சிவகாமி அம்மை    தீர்த்தம்: திருத்தளி தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற பாண்டியநாட்டு ஆலயங்களில் 6 வது ஆலயம். பல நூற்றாண்டுகளுக்கு முன் வால்மீகி முனிவர் கொலை, கொள்ளை...

அருள்மிகு கொடுங்குன்றீசர் திருக்கோயில், பிரான்மலை

அருள்மிகு கொடுங்குன்றீசர் திருக்கோயில், பிரான்மலை

இறைவன்: கொடுங்குன்றீசர்    இறைவி: குயிலமுதநாயகி   தீர்த்தம்: அடையவளந்தான் திருக்குளம்   பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற பாண்டியநாட்டு ஆலயங்களில் 5 வது ஆலயம். மலைக்கு கீழே உள்ள கோயிலான கொடுங்குன்றநாதர் சந்நிதியே பாடல் பெற்ற பதி....

அருள்மிகு சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

அருள்மிகு சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

இறைவன்: சௌந்திரராஜ பெருமாள் இறைவி: சௌந்திரவல்லி தாயார் தீர்த்தம்: சார புஷ்கரணி தீர்த்தம் மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்   கோயிலின் சிறப்புகள்:      மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 17வது திருத்தலம். நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம்...